2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

விஷாலுக்கு கடிதம் அனுப்பிவைப்பு

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 07 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்த நடிகர் விஷாலுக்கு புதிய நிர்வாகத்தினர் கடிதம் அனுப்பியுள்ளனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை நடிகர் விஷால் இருந்து வந்துள்ளார். பின்னர் 2019ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்படாததால் தமிழக அரசு தலையிட்டு, சங்கப் பொறுப்புகளை    அலுவலர் மஞ்சுளாவிடம் ஒப்படைத்தது.

அப்போதே சங்கக் கணக்குகள் அனைத்தையும் மஞ்சுளாவிடம் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு ஒப்படைத்தார்.

தற்போது சங்கத்துக்கு தேர்தல் நடத்தப்பட்டு, முரளி தலைமையிலான நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.  

நடிகர் விஷாலிடம் கணக்குகள் தொடர்பான விளக்கத்தை கேட்டு, தனி அலுவலரும் தணிக்கை குழுவினரும் கடிதம் அனுப்பியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .