Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 ஓகஸ்ட் 09 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (10.08.2011)
இன்று கர வருடம் ஆடி மாதம் 25ஆம் நாள் (10.08.2011) புதன்கிழமை. மரண மேல் அமிர்த யோகமும் துவாதசி திதியும் மூலம் நட்சத்திரம் காலை 05.37 மணிவரை, பின்பு பூராடம்.
இராகு காலம் : காலை 12.00 மணி முதல் 1.30 மணிவரை
எமகண்டம் : காலை 07.30 மணி முதல் 09.00 மணிவரை, இரவு 12.00 மணி முதல் 01.30 மணிவரை.
நல்ல நேரம் : காலை 09.15 மணி முதல் 10.15 மணிவரை, மாலை 03.00 மணி முதல் 04.00 மணிவரை.
மேடம்
தொலைந்த பொருள் மீண்டும் கிடைத்தல், பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பதை தவிர்க்கவும், பெண்களுடன் அனுசரித்து செயல்படவும்.
அஸ்வினி: அமைதி, தேவை
பரணி: சுபம்
கிருத்திகை 1ஆம் பாதம்: சங்கடம்
இடபம்
மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும், புதிய செய்திகள் மகிழ்ச்சி தரும், அறுசுவையான உணவு உண்ணலாம்.
கிருத்திகை 2, 3, 4ஆம் பாதம்: ஆரோக்கியம்
ரோகிணி: ஆதாயம்
மிருகசீரிடம் 1, 2ஆம் பாதம்: நற்செய்தி
மிதுனம்
வியாபாரத்தில் புதிய வாய்ப்புக்கள் பின்தள்ளப்படும், சாப்பாட்டில் வெறுப்பு தன்மை, அறிமுகமற்ற நண்பர்களுடன் பேச்சுகளை தவிர்க்கவும்.
மிருகசீரிடம் 2, 3ஆம் பாதம்: வாக்குவாதம்
திருவாதிரை: விருப்பமின்மை
புனர்பூசம்: போட்டி
கடகம்
பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கும், அயல்தேசங்களிலிருந்து செய்தி வருதல், புதிய சாதனைகளினால் மேன்மை அடையலாம்.
புனர்பூசம்: தகவல்
பூசம்: புதிய வழி
ஆயில்யம்: உதவி
சிம்மம்
புதுமையான பொருள் காணக் கிடைத்தல், தியானங்கள் பிரார்த்தனைகளினால் மனஅமைதி தரும், பகைவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படும்.
மகம்: விசித்திரம்
பூரம்: இறைவழிபாடு
உத்திரம் 1ஆம் பாதம்: மனசங்கடம்
கன்னி
நண்பர்களுடன் பொழுதுபோக்குகளில் ஈடுபடுதல், வியாபாரத்தில் நவீன நுட்பங்களை கையாளுதல், உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.
உத்திரம் 2, 3, 4ஆம் பாதம்: ஆதாயம்
அஸ்தம்: உற்சாகம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: ஒற்றுமை
துலாம்
அனாவசிய செலவுகளை மேற்கொள்ளல், புதிய வேலைப் பணிகள் அலைச்சலை ஏற்படுத்தும், மனதில் சிறு குழப்பங்கள் தோன்றும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: விரயம்
சுவாதி: களைப்பு
விசாகம் 1, 2, 3ஆம் பாதம்: மனதளர்வு
விருட்சிகம்
எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும், பெரியார்களின் அறிவுரை நம்பிக்கை தரும், உயர் உத்தியோகத்தருடன் சுமுகமாக செயல்படவும்.
விசாகம் 4: நன்மை
அனுசம்: சேமிப்பு
கேட்டை: பொறுமை
தனுசு
பெண்களுடன் அதிக பேச்சுக்கள் மனகசப்பை ஏற்படுத்தும், சரும உபாதைகள் வந்து நீங்கும், பிறரின் பிரச்சினைகளினால் மனஸ்தாபம்.
மூலம்: பகை
பூராடம்: சுகயீனம்
உத்திராடம் 1ஆம் பாதம்: வெறுப்பு
மகரம்
குடும்பத்தில் சுபகாரியங்கள் மகிழ்ச்சி தரும், நெருங்கிய நண்பர்களின் உதவி கிடைக்கும், புதிய செய்திகள் வந்து சேரும்.
உத்திராடம் 2, 3, 4ஆம் பாதம்: அனுகூலம்
திருவோணம்: தகவல்
அவிட்டம் 1, 2ஆம் பாதம்: குடும்ப மகிழ்ச்சி
கும்பம்
பொருள் திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, உடல் ஆரோக்கியம் பாதிப்படைதல், வியாபார முயற்சிகள் நஷ்டத்தை ஏற்படுத்தும்.
அவிட்டம் 3, 4ஆம் பாதம்: தேசசுகம்
சதயம்: தோல்வி
பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதம்: கவனம்
மீனம்
பணநெருக்கடிகள் சங்கடத்தை ஏற்படுத்தும், அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும், கடின உழைப்பினால் மட்டுமே வெற்றி.
பூரட்டாதி 4ஆம் பாதம்: விடாமுயற்சி
உத்திரட்டாதி: சோர்வு
ரேவதி: சஞ்சலம்
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago