2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (15.08.2011)

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 14 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (15.08.2011)

இன்று கர வருடம் ஆடி மாதம் 30ஆம் நாள் (15.08.2011) திங்கட்கிழமை. சித்த மேல் மரண யோகமும் துவிதியை திதியும் சதயம் நட்சத்திரம் மாலை 10.32 வரை, பின்பு பூரட்டாதி.

இராகு காலம்: காலை 7.30 முதல் காலை 9.00 மணிவரை.
எமகண்டம்: காலை 10.30 முதல் 12.00 மணிவரை, இரவு 3.00 முதல் 4.30 மணிவரை.


தேய் பிறை சுப முகூர்த்தம்

நல்ல நேரம்: காலை 6.15 முதல் காலை 07.15 மணிவரை, மாலை 4.45 முதல் மாலை 5.45 மணிவரை.


மேடம்
சாப்பாட்டில் வேண்டாத வெறுப்புத் தன்மை, திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, புதிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும். 
அஸ்வினி: பின்னடைவு
பரணி: சகிப்பு
கிருத்திகை 1ஆம் பாதம்: தோல்வி


இடபம்
பணவரவு ஏற்படும், பெரியோர்களின் ஆலோசனைகள் நம்பிக்கை தரும், உடல் உபாதைகள் ஏற்பட்டு நீங்கும்.
கிருத்திகை 2,3,4: ஆதரவு
ரோகிணி: தேகசுகம்
மிருகசீரிடம் 1,2: அதிர்ஷ்டம்


மிதுனம்
சேமிப்பை விட செலவுகள் அதிகரித்தல், செயல்களில் தவறுகள் தோன்றும்,  அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 2,3: துன்பம்
திருவாதிரை: சிரமம்
புனர்பூசம: தடைகள்


கடகம்
அறுசுவையான உணவு உண்ணலாம், குடும்பத்தில் பெண்களின் அக்கரை அதிகரித்தல்,  புதிய முயற்சிகளினால் முன்னேற்றம். 
புனர்பூசம்: மன அமைதி
பூசம்: உயர்வு
ஆயில்யம்: ஆகாரம்


சிம்மம்
அஜீரணம் சம்பந்தமான நோய்கள் ஏற்படும், தொழில் முயற்சிகள் நட்டத்தை ஏற்படுத்தும், மனதில் கவலைகள் ஏற்படும்.
மகம்: கவலை
பூரம்: சங்கடம்
உத்திரம் 1ஆம் பாதம்: போட்டி


கன்னி
பணம் சம்பாதிப்பதில் ஊக்கம் தேவை, வெளி தேசங்களிருந்து செய்திகள் வந்து சேரும், மனதால் அலைச்சல்கள் தோன்றும்.
உத்திரம் 2,3,4: சங்கடம்
அஸ்தம்: தகவல்
சித்திரை 1,2ஆம் பாதம்: உழைப்பு


துலாம்
புதிய முயற்சிகளில் சிறு தோல்விகள் ஏற்படும், வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும்,  தீயவர்களினால் பிரச்சினைகள் ஏற்படும்.
சித்திரை 3,4ஆம் பாதம்: பகை
சுவாதி: துன்பம்
விசாகம் 1,2,3: செலவு


விருட்சிகம்
குடும்பத்தில் சுப விசேஷங்கள் மகிழ்ச்சி தரும், மேல் அதிகாரிகளினால் இடையூறுகள் ஏற்படும், பெண்களின் உதவி கிடைக்கும்.
விசாகம் 4: மகிழ்ச்சி
அனுசம்: நன்மை
கேட்டை: அனுசரிப்பு


தனுசு
அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும், உண்ணும் உணவில் விருப்பமின்மை ஏற்படுதல்,  அறிமுகமற்ற நண்பர்களினால் சிக்கல் ஏற்படும். 
மூலம்: கலைப்பு
பூராடம்: தீய நட்பு
உத்திராடம் 1ஆம் பாதம்: வெறுப்பு


மகரம்
ஒவ்வாத உணவினால் உடல் உஷ்ணம் அதிகரித்தல், மனதால் அலைச்சல்கள் தோன்றும், பிறரின் உதவிகள் கிடைக்கும்.
உத்திராடம் 2,3,4: மன சங்கடம்
திருவோணம்: சுகயீனம்
அவிட்டம் 1,2: ஆதரவு


கும்பம்
துஷ்டர்களினால் குழப்பங்கள் ஏற்படும், அனாவசிய ஆடம்பர செலவுகளை மேற்கொள்ளல், திருடர்கள் பயம் ஏற்படும்.
அவிட்டம் 3,4: செலவு
சதயம்: சிரமம்
பூரட்டாதி 1,2,3: மனஸ்தபாம்


மீனம்                                              
மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும், புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும், புதிய முயற்சிகளினால் முன்னேற்றம். 
பூரட்டாதி 4: ஆதாயம்  
உத்திரட்டாதி: வெற்றி   
ரேவதி: நட்பு

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .