Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஓகஸ்ட் 20 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (21.08.2011)
இன்று கர வருடம் ஆவணி மாதம் 04ஆம் நாள் (21.08.2011) ஞாயிற்றுக்கிழமை. சித்த யோகமும் ஸப்தமி திதியும் பரணி நட்சத்திரம் மாலை 10.37 மணிவரை பின்பு கார்த்திகை.
ராகு காலம்: காலை 04.30 முதல் 06.00 மணிவரை.
எமகண்டம்: பகல் 12.00 முதல் 1.30 மணிவரை, இரவு 06.00 முதல் 07.30 மணிவரை.
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி கோகுலாஷ்டமி
நல்ல நேரம்: காலை 06.15 முதல் காலை 07.15 மணிவரை, மாலை 03.15 முதல் மாலை 04.15 மணிவரை.
மேடம்
அரச தொழில் வாய்ப்புக்கள் தேடி வருதல், நல்ல காரியங்களில் உற்சாகத்துடன் ஈடுபடலாம், தனலாபம் ஏற்படும்.
அஸ்வினி: அதிர்ஷ்டம்
பரணி: புண்ணிய காரியம்
கிருத்திகை 1ஆம் பாதம்: வாய்ப்பு
இடபம்
வேண்டாத செலவுகளை மேற்கொள்ளல், மனக் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும், தீயவர்களுடன் கடின வாக்குவாதங்கள் மன சங்டத்தை ஏற்படும்.
கிருத்திகை 2,3,4: சோர்வு
ரோகிணி: பகை
மிருகசீரிடம் 1,2: விரயம்
மிதுனம்
வியாபாரத்தில் புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும், பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதால் மகிழ்ச்சி ஏற்படும், நண்பர்கள் ஒற்றுமையுடன் செயற்படல்.
மிருகசீரிடம் 2,3: தொடர்புகள்
திருவாதிரை: நட்பு
புனர்பூசம்: இன்பம்
கடகம்
புதிய காரியங்களை உடனுக்குடன் முடித்தல், தூய்மையான ஆடைகளை அணியலாம், நிம்மதியான தூக்கம் இனிதே கிடைக்கும்.
புனர்பூசம்: மன அமைதி
பூசம்: நன்மை
ஆயில்யம்: வெற்றி
சிம்மம்
குடும்பத்தில் சுப விசேஷங்கள் மகிழ்ச்சியை தரும், இறை வழிபாடுகளில் ஈடுபடுவதால் மன அமைதி கிடைக்கும், புதிய நட்புக்கள் கிடைக்கும்.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: ஒற்றுமை
உத்திரம் 1ஆம் பாதம்: தெய்வ நம்பிக்கை
கன்னி
ஆச்சரியமான பொருள் காணக்கிடைத்தல், பிறரின் பிரச்சினைகளை வாதிடுவதனால் பகை, பெண்களுடன் மனக் கசப்புக்கள் தோன்றும்.
உத்திரம் 2,3,4: பகை
அஸ்தம்: இன்பம்
சித்திரை 1,2ஆம் பாதம்: பகை
துலாம்
இன்பமான செய்திகள் வந்து சேரும், அழகிய ஆடை உபகரணங்கள் சேர்க்கை, குடும்பத்தில் சுற்றத்தின் நண்பர்களின் வருகை.
சித்திரை 3,4ஆம் பாதம்: குடும்ப ஒற்றுமை
சுவாதி: நல்ல தகவல்
விசாகம் 1,2,3: அதிர்ஷ்டம்
விருட்சிகம்
புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும், அரச உதவிகள் கிடைக்கும், உற்சாகத்துடன் புதிய முயற்சிகளை முன்னெடுக்கலாம்.
விசாகம் 4: புதிய வழி
அனுசம்: வழிபாடுகள்
கேட்டை: மகிழ்ச்சி
தனுசு
தனலாபம் ஏற்படும், குடும்பத்தில் சகோதர சகோதரிகள் விட்டுகொடுத்து செயற்படல், நவீன நுட்பங்களை பயன்படுத்துவதால் ஆதாயம்.
மூலம்: அந்நியோன்யம்
பூராடம்: இலாபம்
உத்திராடம் 1ஆம் பாதம்: முன்னேற்றம்
மகரம்
தொலைந்த பொருள் மீண்டும் கிடைத்தல், உடல் உபாதைகள் வந்து நீங்கும், கடின வாக்குவாதங்கள் ஏற்படும்.
உத்திராடம் 2,3,4: சுபம்
திருவோணம்: தேக சுகம்
அவிட்டம் 1,2: நாவடக்கம்
கும்பம்
வியாபாரத்தில் முன்னேற்றமும் இலாபமும் காணப்படும், தனவரவு ஏற்படும், புதிய செய்திகள் மகிழ்ச்சி தரும்.
அவிட்டம் 3,4: நன்மை
சதயம்: சந்தோஷம்
பூரட்டாதி 1,2,3: ஆதாயம்
மீனம்
இனிதே உறக்கம் இன்பமாய் கிடைக்கும், தூய்மையான ஆடைகளை அணியலாம், புதிய சாதனைகளினால் மேன்மை அடையலாம்.
பூரட்டாதி 4: நிம்மதி
உத்திரட்டாதி: மனநிறைவு
ரேவதி: சுபம்
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago