Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஓகஸ்ட் 25 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (26.08.2011)
இன்று கர வருடம் ஆவணி மாதம் 09ஆம் நாள் (26.08.2011) வெள்ளிக்கிழமை. சி;த்த மேல் மரண யோகமும் துவாதசி திதியும் புனர்பூசம் நட்சத்திரம் மாலை 03.32 மணிவரை பின்பு பூசம்.
இராகு காலம்: காலை 10.30 முதல் 12.00 மணிவரை
எமகண்டம்: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை, இரவு 09.00 முதல் 10.30 மணிவரை.
தேய் பிறை சுபமுகூர்த்த தினம்.
நல்ல நேரம்: காலை 09.15 முதல் 10.15 மணிவரை, மாலை 04.45 முதல் மாலை 05.45 மணிவரை.
மேடம்
மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செயற்படவும், குடும்பத்தில் பெண்களின் உதவிகள் கிடைக்கும், புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.
அஸ்வினி: ஆதரவு
பரணி: நட்பு
கிருத்திகை 1ஆம் பாதம்: இன்பம்
ரிஷபம்
வியாபாரத்தில் நவீன நுட்பங்களை கையாளுதல், தனலாபம் ஏற்படும், பொழுதுபோக்குகளுக்கு அதிக செலவு செய்தல்.
கிருத்திகை 2, 3, 4: அதிர்ஷ்டம்
ரோகிணி: விரயம்
மிருகசீரிடம் 1, 2: செலவு
மிதுனம்
பெரியோர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும், கடின உழைப்பினால் மட்டும் வெற்றி, பணவரவு கிடைக்கும்.
மிருகசீரிடம் 2, 3: இலாபம்
திருவாதிரை: ஆலோசனை
புனர்பூசம்: விடாமுயற்சி
கடகம்
அரச தொழில் வாய்ப்புக்கள் தேடி வருதல், நல்ல காரியங்களில் உற்சாகத்துடன் ஈடுபடலாம், நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
புனர்பூசம்: மன ஆறுதல்
பூசம்: ஆதாயம்
ஆயில்யம்: புண்ணிய காரியம்
சிம்மம்
நல்ல நண்பர்களின் உதவிகள் கிடைக்கும், திறமையான வேலைப் பணிகளை செயற்படுத்தல், புதிய செய்திகள் மகிழ்ச்சியைத் தரும்.
மகம்: புதிய வழி
பூரம்: நட்பு
உத்திரம் 1ஆம் பாதம்: நல்ல செய்தி
கன்னி
இசையில் அதிக நேரத்தை செலவிடுதல், நாவுக்கு சுவையான ஆகாரம் கிடைக்கும், சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும்.
உத்திரம் 2, 3, 4: மன அமைதி
அஸ்தம்: ஆரோக்கியம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: ஆசீர்வாதம்
துலாம்
பணவரவு ஏற்படும், பகைவர்களுடன் அதிக பேச்சுகளை தவிர்க்கவும், அயராத உழைப்பினால் நிறைவான ஆதாயம்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: நன்மை
சுவாதி: நாவடக்கம்
விசாகம் 1, 2, 3: வரவு
விருட்சிகம்
குடும்பத்தில் சொந்தபந்தங்களின் வருகை, உற்சாகத்துடன் புதிய காரியங்களை தொடங்கலாம், தூய்மையான ஆடைகளை அணியலாம்.
விசாகம் 4: சுபம்
அனுசம்: புத்துணர்ச்சி
கேட்டை: அந்நியோன்யம்
தனுசு
அயல் தேசங்களிருந்து செய்திகள் கிடைக்கும், புதிய காரியங்கள் தடையின்றி நிறைவேறும், மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கும்.
மூலம்: ஆதரவு
பூராடம்: நற்செய்தி
உத்திராடம் 1ஆம் பாதம்: முன்னேற்றம்
மகரம்
சில இடமாற்றங்கள் இலாபகரமாக அமையும், மனச் சோர்வுகள் ஏற்படும், வினோதங்களில் ஈடுபடும் போது கவனம் தேவை.
உத்திராடம் 2, 3, 4: சங்கடம்
திருவோணம்: அவதானம்
அவிட்டம் 1, 2: அவதானம்
கும்பம்
புதிய சாதனைகளினால் மேன்மை அடையலாம், பெரியோர்களின் அறிவுரைகள் நம்பிக்கை தரும், உடல் உபாதைகள் வந்து நீங்கும்.
அவிட்டம் 3, 4: உயர்வு
சதயம்: தேக சுகம்
பூரட்டாதி 1, 2, 3: நம்பிக்கை
மீனம்
இனிதே உறக்கம் இன்பமாய் கிடைக்கும், குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவதால் நன்மை, உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.
பூரட்டாதி 4: மகிழ்ச்சி
உத்திரட்டாதி: நிம்மதி
ரேவதி: பிரார்த்தனைகள்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .