Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஜூலை 04 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (05.07.2011)
இன்று கர வருடம் ஆனி மாதம் 20ஆம் நாள் (05.07.2011) செவ்வாய்க்கிழமை, சித்த யோகமும் சதுர்த்தி திதியும் மக நட்சத்திரம் மாலை 8.54 வரை, பின்பு பூரம்.
இராகு காலம்: காலை 03.00 முதல் 04.30 மணிவரை.
எமகண்டம்: காலை 09.00 முதல் 10.30 மணிவரை, இரவு 01.30 முதல் 03.00 மணிவரை.
ஸ்கந்த பஞ்சமி, மாணிக்கவாசகர் குருபூஜை தினம்.
நல்ல நேரம்: காலை 07.45 முதல் காலை 08.45 மணிவரை, மாலை 04.45 முதல் மாலை 05.45 மணிவரை.
மேடம்
கேட்பார் பேச்சை கேட்டு நடப்பதால் துன்பம், பெண்களுடன் அனுசரித்து செயற்படவும், சரும நோய்கள் ஏற்பட்டு மறையும்.
அஸ்வினி: நாவடக்கம்
பரணி: துக்கம்
கிருத்திகை 1ஆம் பாதம்: சுகயீனம்
இடபம்
குடும்பத்தில் சுற்றத்தார் நண்பர்களின் வருகை, புதிய வேலைகளை செயற்படுத்தலாம், நண்பர்களின் ஒற்றுமை பலப்படும்.
கிருத்திகை 2,3,4: மகிழ்ச்சி
ரோகிணி: வெற்றி
மிருகசீரிடம் 1,2: நட்பு
மிதுனம்
திருடர்களிடம் மிகக் கவனம் தேவை, புதிய காரியங்களில் சிறு பதற்றம் ஏற்படும், பகைவர்களுடனான பேச்சுவார்த்தைகளைத் தவிர்க்கவும்.
மிருகசீரிடம் 2,3: தடங்கல்
திருவாதிரை: அவதானம்
புனர்பூசம்: பகை
கடகம்
பணம் சேமிப்பதில் கடின உழைப்பு தேவை, தூர தேசங்களிருந்து செய்திகள் கிடைக்கும், மனதளவில் அலைச்சல்கள் ஏற்படக்கூடும்.
புனர்பூசம்: சோர்வு
பூசம்: நல்ல செய்தி
ஆயில்யம்: ஆர்வம்
சிம்மம்
காணாமல் போன பொருள் கிடைக்கும், தியானங்கள், பிராத்தனைகள் அனுகூலத்தை ஏற்படுத்தும், மனதால் கஷ்டம்.
மகம்: சுபம்
பூரம்: சிரமம்
உத்திரம் 1ஆம் பாதம்: வழிபாடுகள்
கன்னி
வியாபாரத்தில் நவீன நுட்;பங்களை மேம்படுத்தல், பொன் பொருள் சேர்க்கை, நண்பர்களுடன் பொழுதுபோக்குகளில் ஈடுபடல்.
உத்திரம் 2,3,4: அனுகூலம்
அஸ்தம்: அதிஷ்டம்
சித்திரை 1,2ஆம் பாதம்: மேன்மை
துலாம்
ஒவ்வாத உணவினால் உடல்நலன் பாதிப்படைதல், தேவையற்ற பிரச்சனைகளைப் பற்றிப் பேசுவதால் பகை, மனதில் நிம்மதியின்மை ஏற்படும்.
சித்திரை 3,4ஆம் பாதம்: மனஸ்தாபம்
சுவாதி: தேகசுகம்
விசாகம் 1,2,3: வெறுப்பு
விருட்சிகம்
அதிக செலவுகளினால் பணத் தட்டுப்பாடுகள் ஏற்படும், பிறரின் உதவிகளை எதிர்ப்பார்ப்பதை தவிர்க்கவும், மனக் கஷ்டங்கள் ஏற்படும்.
விசாகம் 4: சங்கடம்
அனுசம்: சலுகை
கேட்டை: துன்பம்
தனுசு
பெண்களுடனான அனாவசியப் பிரச்சினைகளைத் தவிர்க்கவும், நல்ல காரியங்களில் நம்பிக்கையுடன் ஈடுபடல், மனச் சோர்வுகள் ஏற்படும்.
மூலம்: பயம்
பூராடம்: பொறுமை
உத்திராடம் 1ஆம் பாதம்: இறைநம்பிக்கை
மகரம்
வினோதங்களுக்கு அதிக செலவுகளை மேற்கொள்ளல், பொன்பொருள் சேர்க்கை, மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
உத்திராடம் 2,3,4: நற்செய்தி
திருவோணம்: விரயம்
அவிட்டம் 1,2: இலாபம்
கும்பம்
புதிய காரியங்களில் தடைகள் ஏற்படும், சில விதமான சிக்கல்கள் ஏற்படும், உண்ணும் உணவில் விருப்பமின்மை ஏற்படுதல்.
அவிட்டம் 3, 4: குழப்பம்
சதயம்: கலைப்பு
பூரட்டாதி 1,2,3: சகிப்புத் தன்மை
மீனம்
பணம் சம்பாதிப்பதில் ஊக்கம் தேவை, உடல் உஷ்ணம் அதிகரிக்கும், வெளித் தேசங்களிலிருந்து செய்திகள் கிடைக்கும்.
பூரட்டாதி 4: நலன் பாதிப்பு
உத்திரட்டாதி: தகவல்
ரேவதி: உழைப்பு
44 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago