2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

6 பாகிஸ்தானியர்களுக்கு சவுதியில் சிறை தண்டனை

Editorial   / 2022 ஓகஸ்ட் 12 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் மற்றும் அவரது தூதுக்குழுவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பி புனித ஸ்தலமான மஸ்ஜித்-இ-நபவியை இழிவுபடுத்தியதற்காக 6 பாகிஸ்தானியர்கள் குற்றவாளிகள் என சவுதி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) அமைப்பைச் சேர்ந்த சில எதிர்ப்பாளர்கள், சவுதி அரேபியாவில் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பின் தூதுக்குழுவிற்கு எதிராக உரத்த குரலில் முழக்கங்களை எழுப்பி மஸ்ஜித்-இ-நபவியின் புனிதத்தை மீறினர்.

மஸ்ஜித்-இ-நபவிக்கு செல்லும் தூதுக்குழுவைப் பார்த்து நூற்றுக்கணக்கான யாத்ரீகர்கள் "சோர் சோர்" [திருடர்கள்] கோஷங்களை எழுப்பியதைக் காட்டும் ஒரு வைரல் வீடியோ சமூக ஊடக தளங்களில் பரவி வருகிறது.

சவூதி நீதிமன்றம் ஆறு பாகிஸ்தானியர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மூன்று பாகிஸ்தானியர்களுக்கு தலா 8 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்துள்ளது என்று பாகிஸ்தானின் உள்ளூர் ஊடகமான தி நியூஸ் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

சவூதி நீதிமன்றத்தின் படி, ஹார்ம்-இ-மதீனாவில் ஆறு பேரும் நிந்தனை செய்ததாகக் கண்டறியப்பட்டனர். அனஸ், இர்ஷாத் மற்றும் முஹம்மது சலீம் ஆகியோருக்கு 10 ஆண்டுகளும், குவாஜா லுக்மான், முஹம்மது அப்சல் மற்றும் குலாம் முஹம்மது ஆகியோருக்கு 8 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஒரு வீடியோவில், தகவல் அமைச்சர் மரியம் அவுரங்கசீப் மற்றும் தேசிய சட்டமன்ற உறுப்பினர் ஷாஜேன் புக்டி மற்றவர்களுடன் காணப்பட்டனர்.

பாகிஸ்தானிய செய்தித்தாள் படி, ஔரங்கசீப் மறைமுகமாக பதவி நீக்கம் செய்யப்பட்ட இம்ரான் கானை இந்த போராட்டத்திற்கு குற்றம் சாட்டினார்.

"இந்த புண்ணிய பூமியில் இந்த நபரின் பெயரை நான் சொல்ல மாட்டேன், ஏனென்றால் நான் இந்த நிலத்தை அரசியலுக்கு பயன்படுத்த விரும்பவில்லை. ஆனால் அவர்கள் [பாகிஸ்தான்] சமூகத்தை அழித்துவிட்டனர்," என்று அவர் கூறினார்.

சவூதி அரேபியாவிற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் முதல் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இது இடம்பெற்றுள்ளது.

பாகிஸ்தான் பிரதமரின் ராஜ்ய பயணத்தில் டஜன் கணக்கான அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் உடன் சென்றுள்ளனர். மேலும், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மரியம் ஔரங்கசீப் மற்றும் பிற அமைச்சர்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதால், ஆறு பேருக்கும் 200,000 ரியால் அபராதம் விதித்து மதீனா நீதிமன்றம் அவர்களின் கையடக்க தொலைபேசிகளை பறிமுதல் செய்தது.

மதீனா காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த பாகிஸ்தானியர்களை கைது செய்ததன் மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாகவும், இந்த விவகாரம் உரிய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .