2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘அப்பல் டெய்லி’ ஆசிரியரின் பிணை இரத்து

Editorial   / 2021 ஜூலை 23 , பி.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹொங்கொங் தேசிய பாதுகாப்பு பொலிஸ், அப்பல் டெய்லியின் முன்னாள் துணை பிரசுரிப்பாளர் சான் புய் மேன் , ஆங்கில செய்திப்பிரிவு முன்னாள் பொறுப்பாசிரியர் வை-கொங் ஆகியோரின் பிணையை இரத்து செய்திருக்கிறது என உள்ளுர் பத்திரிகைகள் தெரிவித்தன.

முன்னாள் நிர்வாக ஆசிரியர் லாம் மேன்-சுங்கையும் தேசிய பாகாப்பு பொலிஸ், புதன்கிழமை காலை தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்க வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டுச்சதி செய்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்தது. லாம் மேன்-சுங்கின் வீட்டை அன்றைய தினம் காலை ​பொலிஸார் சோதனைக்கு உட்படுத்தியதாகவும் பத்திரிகைகள் தெரிவித்தன.

சீன சார்பு அதிகாரிகள் மேற்படி சதியுடன் தொடர்புள்ளவர்களைக் கண்றியும் வகையில் அப்பல் பத்திரிகையின் முன்னாள் உத்தியோகத்தர்களை கண்காணித்து வருகின்றனர்.

பத்திரிகை நிறுவன செயல்பாடுகளுடன் தொடர்புடைய ஒருவர்  கைது செய்யப்பட்டதை உறுதி செய்தார். இப்பத்திரிகையை  கடந்தமாதம் மூடவேண்டிய நிலைமை ஏற்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .