2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அழுத பெண்ணுக்கு கட்டணம் அறவிட்ட வைத்தியசாலை

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 05 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்ணொருவர் அழுதமைக்காக வைத்தியசாலையில் கட்டணம் அறவிடப்பட்ட  விநோத சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த மிட்ச் எனும் பெண் தனது மச்சத்தை நீக்குவதற்காக மருத்துவமனை ஒன்றிற்குச் சென்றுள்ளார்.

 

அங்கு அவருக்கு மச்சத்தை நீக்குவதற்கான அறுவைச் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிகிச்சையின் போது பயத்தில் குறித்த பெண் அழுதுள்ளார். சிகிச்சையின் பின்னர் வழங்கப்பட்ட கட்டணப்பட்டியலில் சிகிச்சைக்கான கட்டணமாக 223 டொலர்களும், சிகிச்சையின் போது அழுதமைக்காக பிரீஃப் எமோஷன் என்ற பெயரில் 11 டொலர்களும் கட்டணமாகக் கோரப்பட்டிருந்தது.

இவ்விடயம் குறித்து அதிர்ச்சியடைந்த அப் பெண்மணி தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கு மருத்துவமனை அளித்த கட்டண பற்றுச் சீட்டைப் பகிர்ந்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த அழுகைக் கட்டண விவகாரம் பேசு பொருளாக மாறி வருகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .