2025 ஒக்டோபர் 16, வியாழக்கிழமை

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையில் போர் நிறுத்தம்

Freelancer   / 2025 ஒக்டோபர் 16 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர்நிறுத்தம் அமுலுக்கு வந்ததாக ஆப்கானிஸ்தான் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்தார். 

பாகிஸ்​தானில் தீவிர​வாத செயல்​களில் ஈடு​படும் தெஹ்​ரிக்​-இ-தலி​பான்​களுக்கு ஆப்​கானிஸ்​தானில் பயிற்சி அளிக்​கப்​படு​வ​தாக குற்​றம்​சாட்​டி, அந்​நாட்டு எல்​லை​யில் பாகிஸ்​தான் கடந்த வாரம் குண்டு வீசி​யது.

இதற்கு பதிலடி​யாக ஆப்​கன் படை​யினர் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்​கள் 58 பேர் இறந்​த​னர். 

இந்நிலையில், காந்​த​கார் பகு​தி​யில் பாகிஸ்​தான் இராணுவம் நேற்று காலை தாக்​குதல் நடத்​தி​ய​து. இதில் ஆப்​கன் மக்​கள் 12 பேர் உயி​ரிழந்​த​னர். 100 இற்கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​தனர். 

ஆப்​கன் படைகள் நடத்​திய பதில் தாக்​குதலில் பாகிஸ்தான் வீரர்கள் பலர் உயி​ரிழந்​துள்ளனர். 

இந்நிலையில் 48 மணி நேரத்துக்கு போரை நிறுத்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .