2024 மே 20, திங்கட்கிழமை

’ஆயுத உதவிகளை நிறுத்துவோம்’

Freelancer   / 2024 மே 10 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு காஸாவின் ரஃபா நகரம் மீது தாக்குதல் நடத்தினால், ஆயுத உதவிகளை நிறுத்துவோம் என இஸ்ரேலுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஃபாவுக்குள் இஸ்ரேல் இராணுவம் தரைவழி தாக்குதலை நடத்தினால், அந்த நாட்டுக்கு ஆயுதங்கள் மற்றும் பீரங்கி குண்டுகளை வழங்கப் போவதில்லை என ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.

ரஃபாவின் தற்போதைய நிலைமையை தரைப்படை நடவடிக்கையாக அமெரிக்கா வரையறுக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X