Editorial / 2025 நவம்பர் 07 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜெர்மனியில் ஊர்செலன் நகரில் உள்ள மருத்துவமனையில் ஆண் நர்சாக 2020-ம் ஆண்டு பணியில் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய பணி காலத்தில், நோயாளிகளை பராமரிப்பதற்கு பதிலாக அவர்களை ஊசி போட்டு கொலை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார்.
இந்த அதிர்ச்சி சம்பவம் 2023-ம் ஆண்டு டிசம்பர் முதல் 2024-ம் ஆண்டு மே வரையில் நடந்துள்ளது. அப்போது, இதுபோன்று 10 நோயாளிகளை கொலை செய்துள்ளார். 27 பேரை கொல்ல முயற்சியும் செய்துள்ளார். இரவு நேர பணியின்போது, பணி சுமை கூடுதலாக இருக்கிறது என உணர்ந்த அவர், இந்த முடிவை எடுத்துள்ளார்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை ஆச்சன் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அதில், 15 ஆண்டுகளுக்கு குறையாமல் வெளியே வர முடியாதபடிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், அவர் மேல்முறையீடு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், உயிரிழந்தவர்களின் உடல்களை வெளியே எடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால், மீண்டும் அவருக்கு எதிராக விசாரணை நடக்கும் என தெரிகிறது.
2019-ம் ஆண்டில் நீல்ஸ் ஹோஜெல் என்ற முன்னாள் ஆண் நர்ஸ் ஒருவர் வடக்கு ஜெர்மனியில் 2 மருத்துவமனைகளில் வேலை செய்தபோது, 85 நோயாளிகளை கொலை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளானார். 1999-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரையில் நோயாளிகளுக்கு அதிக டோஸ் மருந்துகளை கொடுத்ததில் பலர் உயிரிழந்தனர். ஜெர்மனியின் நவீன வரலாற்றில் கொடூர கொலைக்காரர் இவர் என நம்பப்படுகிறது. இந்த நிலையில், 20 ஆண்டுகள் கழித்து மற்றொரு கொடூர வழக்கு தெரிய வந்துள்ளது.
3 minute ago
5 minute ago
13 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
5 minute ago
13 minute ago
17 minute ago