Freelancer / 2023 ஜூலை 06 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பு 10 மாத காலம் தாயின் கருவறையில் இருக்கும். அந்த 10 மாதங்களில் குழந்தையின் உடல் உறுப்புகள், செயல் திறன் ஆகியவை வளர்ச்சி அடையும். அவ்வாறு முழுமையாக வளர்ச்சி அடையாமல் பிறக்கும் குழந்தைகள் குறை மாத குழந்தைகள் என அழைக்கப்படும்.
அவர்கள் மற்ற குழந்தைகளை விட சற்று குறைவான வளர்ச்சி மற்றும் செயலி திறன் கொண்டிருப்பர். அவ்வாறு 22 இரண்டு வாரங்களில் பிறந்த பெண் குழந்தை ஒன்று தற்போது நலமுடன் உள்ளது. அந்த குழந்தை எந்த வித பிரச்சனையும் இன்றி மற்ற குழந்தைகளை போலவே இயல்பாக இருப்பதால் அதை அதிசய குழந்தை என்கிறார்கள் மருத்துவர்கள்.
அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் மருத்துவமனையில் விஷம் குடித்ததாக கூறி ஒரு கர்ப்பிணிப் பெண் அனுமதிக்கப்பட்டார். அவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவருக்கு பெப்ரவரி 22ம் திகதி காலை பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் எடை 12.4 அவுன்ஸ் அதாவது 350 கிராம் மட்டுமே. இதை கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
40 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
49 minute ago
1 hours ago