Freelancer / 2023 ஓகஸ்ட் 15 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவும், தென்கொரியாவும் ஆண்டுதோறும் கொரிய தீபகற்ப பகுதியில் கூட்டுப்போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி மாத இறுதியில் இந்த ஆண்டுக்கான போர்ப்பயிற்சி நடைபெற உள்ளது. ஆனால் இதனை போருக்கான நடைமுறை என கருதும் வடகொரியா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்தநிலையில் வடகொரியாவில் உள்ள வெடிமருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் ஜனாதிபதி கிம் ஜாங் அன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கவச வாகனங்கள், பீரங்கிகள் போன்றவற்றை பார்வையிட்ட அவர் நவீன ஏவுகணைகள் மற்றும் பிற ஆயுதங்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே, அவற்றை விரைந்து செய்து முடிக்க அவர் இராணுவத்துக்கு உத்தரவிட்டதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
7 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago
2 hours ago