2025 நவம்பர் 05, புதன்கிழமை

சீனாவுக்கு வெளியே வேகமாகப் பரவும் COVID-19

Editorial   / 2020 மார்ச் 03 , பி.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவை விட சீனாவுக்கு வெளியே தற்போது மிகவும் வேகமாக COVID-19 பரவுவது போலத் தோன்றுகையில், COVID-19-ஆல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளிலுள்ள விமானநிலையங்களில் பயணிகளுக்கான சோதனைகள் அதிகரித்துள்ளன.

கடந்த 24 மணித்தியாலங்களில் சீனாவில் உள்ளதைப் போன்று எட்டு மடங்கு COVID-19 தொற்றுக்குள்ளானோர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலகக் சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்றோஸ் அட்ஹனோம் கிபிறேயெஸூஸ் நேற்றிரவு தெரிவித்துள்ளதுடன், பூகோள ரீதியில் COVID-19 பரவும் ஆபத்தானது மிகவும் உயர் மட்டத்தில் இருப்பதாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில், சீனாவில் நேற்றைய முடிவில் COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 31ஆல் அதிகரித்து 2,943ஆகக் காணப்படுகிறது. இதில், COVID-19-இன் மய்யமான ஹுபெய் மாகாணத்திலேயே 31 உயிரிழப்புகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன், அதில் 24 பேர் மாகாணத் தலைநகர் வுஹானில் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, நேற்று புதிதாக 125 பேரே COVID-19-ஆல் பீடிக்கப்பட்டுள்ளதாக சீன தேசிய சுகாதார ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ள நிலையில் மொத்தமாக சீனாவில் COVID-19-ஆல் 80,151 பேர் பீடிக்கப்பட்டுள்ளனர். குறித்த 125 பேரில் 114 பேர் ஹுபெய் மாகாணத்தைச் சேர்ந்த்தவர்கள் என்பதுடன், 111 பேர் வுஹானைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்நிலையில், ஈரானில் புதிதாக 523 பேர் COVID-19 தொற்றுக்குள்ளாகியதுள்ளதுடன், 12 பேர் புதிதாக COVID-19-ஆல் உயிரிழந்ததாக ஈரானிய அரச தொலைக்காட்சியில் பிரதி சுகாதார அமைச்சர் அலிரெஸா றைஸி நேற்று  அறிவித்துள்ள நிலையில் அங்கு மொத்தமாக1,501 பேர் COVID-19-ஆல் பீடிக்கப்பட்டுள்ளதுடன், 66 பேர் COVID-19-ஆல் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, இத்தாலியில் COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது நேற்று 18ஆல் அதிகரித்து 52 பேர் COVID-19-ஆல் உயிரிழந்துள்ளனர். இதுதவிர, COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 342ஆல் நேற்று அதிகரித்து அங்கு 2,036 பேர் COVID-19-ஆல் பீடிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தென்கொரியாவில் COVID-19-ஆல் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 5,186ஆக உயர்ந்துள்ளதாக நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான கொரிய நிலையங்கள் இன்று தெரிவித்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X