2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சீனாவுக்குள் மீண்டும் புகுந்தது கொரோனா

Editorial   / 2021 ஜூலை 30 , மு.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

குன்மிங்(ஷின்ஹூவா)

உறுதிசெய்யப்பட்ட பத்தொன்பது கொவிட்19 நோயாளர்களும் உறுதிசெய்யப்படாத 3 பேரும் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்திருப்பதாக தென்கிழக்கு சீனாவின் எல்லைப்பகுதியான யுனான் மாகாணம் அறிவித்துள்ளது.

மாகாண சுகாதார ஆணையம் இதனை தெரிவித்தது என செய்திகள் வெளியாகியுள்ளன.

நிலப்பகுதி சோதனைச்சாவடிகள் மூலம் நாட்டுக்குள் நுழைவதற்கு முன்னர் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த எல்லா உறுதிசெய்யப்பட்ட நோயாளர்களும் மியன்மாரில் வசித்தனர்.

உறுதிப்படுத்தப்படாத மூன்று பேரும் லாவோஸிலிருந்து வருகை தந்துள்ளனர். உள்நாட்டிலிருந்து நோய் தொற்றுக்குள்ளான அல்லது உறுதிசெய்யப்படாத நோயாளர் எவரும் இல்லையென யுனான் அறிவித்தது.

கடந்த திங்கள்வரை உள்நாட்டில் தொற்றுக்குள்ளான 69 பேர் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த 256 பேர் உட்பட 325 உறுதி செய்யப்பட்ட கொனோரோனா நோயாளர்கள் யுனான் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X