2025 ஜூலை 16, புதன்கிழமை

தென்கொரியாவில் லிபரல் கட்சி வெற்றி

Editorial   / 2020 ஏப்ரல் 16 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கொரியாவில் நேற்று, புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான பொது தேர்தல் அமைதியாக நடந்தது. 

ஏராளமானோர், முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து வாக்களித்தனர். ஒவ்வொரு வரும், வெப்பமானி சோதனைக்கு பிறகே, வாக்கு சாவடிக்குள் அனுமதிக்கப்பட்டனர். 

அதன்பின், கை துாய்மைக்கான கிருமி நாசினி, 'ஜெல்' அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து, ஒரு முறை பயன்படுத்தும், கையுறை அளிக்கப்பட்டது. 

அதை அணிந்து, விருப்பமான வேட்பாளர்களின் சின்னத்திற்கு மக்கள் ஓட்டளித்தனர். சுயமாக தனிமையில் உள்ளோருக்கு, இதர வாக்காளர்களுக்கான ஓட்டு போடும் நேரம் முடிந்ததும், ஓட்டு போட வாய்ப்பளிக்கப்பட்டது. 

'இந்த தேர்தலில், ஜனாதிபதி மூன் ஜே இன் தலைமையிலான லிபரல் கட்சி பெரும்பான்மை இடங்களை வெற்றிக்கொண்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .