2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நடனமாடிய ஜோடிக்கு 10 ஆண்டுகள் சிறை

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 02 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஈரானில்  பொது இடங்களில்  மக்கள் நடனமாடத்  தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அண்மையில்  அந்நாட்டின் தலைநகரான  தெஹ்ரானில் உள்ள  நினைவுச் சின்னமான ஆசாதி கோபுரம் முன்பாக, இருவர் நடனமாடி ,சமூக வலைதளத்தில்  பதிவிட்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனைத்தொடர்ந்து  விதிகளை மீறி நடனமாடியமைக்காக இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .