Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 08 , பி.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

தனது அரசாங்கம் மீது தான் கோரிய நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரெஞ்சுப் பிரதமர் பொஸ்வா பைரூ தோல்வியடைந்துள்ளார். 
பிரதமர் பைரூவை பதவியிலிருந்து வெளியேற்றவும், அவரது சிறுபான்மை அரசாங்கத்தை கவிழ்க்கவும் பிரெஞ்சு தேசிய சட்டசபையானது 364 -194 என்ற வகையில் வாக்களித்திருந்தது. இன்னொரு 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில் நாளை காலை தனது இராஜினாமாவை பிரதமர் பைரூ, ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனிடம் கையளிக்கவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .