2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பொலிஸாரிடம் தன்னை ஒப்படைத்த ஸூமா

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 08 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸூமா, தன்னை பொலிஸாரிடம் நேற்று ஒப்படைத்துள்ளார்.

நீதிமன்றத்தை அவமானப்படுத்தியமைக்காக 15 மாத சிறைத்தண்டனையை ஆரம்பிக்கும் பொருட்டே பொலிஸாரிடம் தன்னை முன்னாள் ஜனாதிபதி ஸூமா ஒப்படைத்துள்ளார்.

பொலிஸ் நிலையமொன்றில் தோன்றத் தவறினால், நேற்றைக்கிடையில் முன்னாள் ஜனாதிபதி ஸூமாவை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ஸூமாவின் கைதைத் தடுப்பதற்கு நூற்றுக்கணக்கான ஆதரவாளர் கூடியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .