2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மீட்கப்பட்ட 25 ரகசிய ஆவணங்கள்; சிக்கினார் ட்ரம்ப்

Ilango Bharathy   / 2022 ஓகஸ்ட் 29 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புளோரிடா இல்லத்தில் நடத்தப்பட்ட FBI சோதனையின் போது மீட்கப்பட்ட 15 பெட்டிகளில் 14 ரகசிய பதிவுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வி அடைந்ததை அடுத்து, வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறும் போது ரகசிய ஆவணங்களை எடுத்து சென்றதாகவும், அதனை அவரது பங்களாவில் மறைத்து வைத்து இருப்பதாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

 இதனை அடுத்து புளோரிடா மாகணத்தில் உள்ள அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மார்-ஏ-லகோ பங்களாவில் கடந்த 8 ஆம் தேதி FBI அதிகாரிகளால் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் 15 பெட்டிகள் வரை மீட்கப்பட்ட நிலையில், இவற்றில் 14 ரகசிய பதிவுகள் உள்ளதாகவும், அதில் 25 ஆவணங்கள் மிக ரகசியமானவை என்றும் வாக்குமூலம் ஒன்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 8 அன்று Mar-a-Lago பங்களாவில் நடத்தப்பட்ட தேடுதலுக்கான நியாயத்தை விளக்கி அமெரிக்க நீதித்துறை பகுதி-தடைசெய்யப்பட்ட வாக்குமூலத்தை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.

 இந்த ஆவணம் அதன் திருத்தப்பட்ட வடிவத்தில் கூட தற்போதைய குற்றவியல் விசாரணை பற்றிய புதிய விவரங்களை வழங்குகின்றது, இவை ட்ரம்பிற்கு கூடுதலாக புதிய சட்ட ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X