2025 நவம்பர் 05, புதன்கிழமை

மீண்டும் நிபா வைரஸ் எச்சரிக்கை

Editorial   / 2019 ஜூன் 05 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதாக, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியிலுள்ள மக்களிடத்தில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

எர்ணாகுளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞருக்கு, நிபா வைரஸ் பாதிப்பு உள்ளதென அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.

கேரளாவில் பழந்தின்னி வெளவ்வால்கள் மூலம் பரவும் நிபா வைரஸ் காய்ச்சல் காரணமாக கடந்த ஆண்டு 17 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கையால் காய்ச்சல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இப்போது மீண்டும் அதேபோன்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.

எர்ணாகுளம் மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறிகளுடன் 23 வயது இளைஞர் ஒருவர் கொச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இளைஞரின் ரத்த மாதிரிகள் புனே மற்றும் ஆலப்புழாவுக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையே மாவட்ட நிர்வாகம் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், எர்ணாகுளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதியாகியது என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், எர்ணாகுளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதியாகியது.

புனே பரிசோதனை மையத்தின் அறிக்கை இதனை உறுதிப்படுத்தி உள்ளது. நிபா வைரஸ் பாதிப்புகளை கவனிக்க தனி சிகிச்சை மையம் ஒதுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X