2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மூக்கில் இருந்து வடியும் குருதி; மரணத்தை ஏற்படுத்தும் புதிய வகை காய்ச்சல்

Ilango Bharathy   / 2022 ஜூன் 01 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
ஈராக்கில் கால்நடைகளின் மேலிருக்கும் உண்ணிகள் மூலமாக மனிதர்களுக்கு புதியதொரு வைரஸ் காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருவதாகதத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இவ் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்படுவதோடு மூக்கில் இருந்து இரத்தம் வடிவதாகவும், இந்நிலை தொடருமானால் உயிரிழப்பு  ஏற்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஒரு வித உண்ணி தாக்குதலுக்குள்ளான ஆடு, மாடு போன்ற விலங்குகளோடு அதிகமாகத் தொடர்பு கொண்டவர்களுக்கு இந்த காய்ச்சல் எளிதில் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
மேலும் தற்போது 33 வயதிற்கு குறைவானவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
எனினும் இக் காய்ச்சலுக்கு தற்போது வரை தடுப்பூசி கண்டுபிடிக்க முடியவில்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஈராக்கில் இவ்வாண்டில்  இதுவரை, 111 பேருக்கு இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களில் 19 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .