Simrith / 2025 ஜூலை 24 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்யாவின் தூர கிழக்கு அமுர் பகுதியில் விபத்துக்குள்ளான அங்காரா ஏர்லைன்ஸ் An-24 பயணிகள் விமானத்தில் இருந்த 49 பேரும் இறந்துவிட்டனர்.
முதற்கட்ட தகவல்களை மேற்கோள் காட்டி TASS செய்தி நிறுவனம், இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. .
மாயமான விமானத்தை தேடும் நடவடிக்கைகளில் மீட்பு ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. அந்த ஹெலிகாப்டர், விமானம் எரிவை கண்டுள்ளது மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விமானம் ஐந்து குழந்தைகள் உட்பட 43 பயணிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. அதில் 6 பணியாளர்கள் இருந்தனர்.
விமானியின் பிழை மற்றும் குறைந்த தெரிவுநிலை ஆகியவை விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.
48 minute ago
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
14 Apr 2026