2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

லெபனானின் ஐ.நா. முகாம் மீது தாக்குதல்

Freelancer   / 2026 ஏப்ரல் 04 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை முகாம் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தெற்கு லெபனானில் உள்ள எடைசா பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பு முகாம் ஒன்றின் மீது நேற்று (03) மதியம் ஒரு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது.

இந்த வெடிப்பில் மூன்று அமைதிப்படை வீரர்கள் காயமடைந்தனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஐக்கிய நாடுகள் அமைதிப்படை மீது நடத்தப்படும் மூன்றாவது தாக்குதல் இதுவாகும். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .