2025 நவம்பர் 05, புதன்கிழமை

வான் விபத்தில் 8 மாணவர்கள் பலி

Editorial   / 2019 ஓகஸ்ட் 06 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாடசாலை வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் 8 பாடசாலை மாணவர்கள் பலியாகியுள்ளனர்.

இந்த விபத்து, இன்று (06) காலை இடம்பெற்றுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் தேக்ரி மாவட்டத்திலுள்ள மந்தாகினி நகரை நோக்கிச் சென்ற பாடசாலை வானே பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 8 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 மாணவர்கள் காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X