2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கால்பந்தாட்டப் போட்டியில் மன்னார் மாவட்ட அணிக்கு சம்பியன்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 29 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்,எஸ்.ஜெனி)

வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் வடமாகாண மாவட்ட அணிகளுக்கிடையே நடத்திய ஆண்களுக்கான கால்பந்தாட்டப் போட்டியில் மன்னார் மாவட்ட அணி  வடமாகாண சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் மன்னார் மாவட்ட அணியும் யாழ்.  மாவட்ட அணியும் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல்கள் எதனையும் பெறாத நிலையில் சமநிலையில் முடிவடைந்தது. இரண்டாம் பாதி ஆட்டத்தில் மன்னார் மாவட்ட அணிக்கு இரண்டு கோல்கள் கிடைத்தன.

ஆட்ட நிறைவில் மன்னார் மாவட்ட அணி 04க்கு 00 என்ற கோல் கணக்கில் யாழ். மாவட்ட அணியை வெற்றி பெற்று வடமாகாண சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.        


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X