2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கூடைப்பந்தாட்ட போட்டியில் இராமநாதன் கல்லூரி, யாழ்.இந்து கல்லூரி சம்பியன்

Kogilavani   / 2011 நவம்பர் 02 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
அமரர் பொன். விபுலானந்தன் நினைவாக யாழ்.மத்திய கல்லூரியின்  மாணவர் முதல்வர் சபையால் நடத்தப்பட்ட இரு பாலாருக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டி நேற்று முன்தினம் திங்கட்கிழமை யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

பெண்களுக்கான இறுதி கூடைப்பந்தாட்ட  போட்டியில் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியும், கொக்குவில் இந்துக் கல்லூரியும் மோதிகொண்டன.

இதில் 28-20 என்ற புள்ளிகள் அடிப்படையில் இராமநாதன் கல்லூரி வெற்றிபெற்றது.

ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் யாழ்.மத்திய கல்லூரியும், யாழ். இந்துக் கல்லூரியும் மோதிக்கொண்டன.  இப்போட்டியில் 32-30 என்ற புள்ளிகள் கணக்கில் யாழ்.இந்துக் கல்லூரி முதலிடத்தைப் பெற்று சம்பியனாகியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X