2025 ஜூலை 17, வியாழக்கிழமை

அம்பாறை, திருமலை அணிகள் சம்பியன்

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 13 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாண ஆண் பெண் இருபாலாருக்குமான ரூபவாகினி கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி சனிக்கிழமை மட்டக்களப்பு கல்லடி விபுலானந்தா விளையாட்டுக் கழக மைதானத்தில் கிழக்க மாகாணப் பணிப்பாளர் கே.தவராசா தலைமையில் இடம்பெற்றது.

இப்போட்டியில் கிழக்கு மாகாணத்தில் இருந்து விண்ணப்பித்த சுமார் 18 அணிகள் கலந்து கொண்டன. ஆண்களுக்கான போட்டியில் திருகோணமலை அணி சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டதுடன் பெண்கள் பிரிவில் அம்பாறை அணி சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஏ.ஜீ.ஏ.கபூர் மற்றும் மாவட்ட இளைஞர் சேவை அலுவலகர் திருமதி ஜே.கலாராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X