Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2012 ஜனவரி 04 , மு.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தினால் வலிகாமம் பிரதேசத்திற்குட்பட்ட பிரதேச செயலகங்களுக்கிடையே நடத்திய 15 ஓவர்களுக்கு மட்டுப்படுத்திய மென்பந்து கிரிக்கெட் போட்டி மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் அன்ரன்யோகநாயகம் எழிலரசி தலைமையில் இப்போட்டி நடைபெற்றது. இறுதிப் போட்டியில் தெல்லிப்பளை பிரதேச செயலக அணியும் உடுவில் பிரதேச செயலக அணியும் மோதிக்கொண்டன.
முதலில் துடுப்பெடுத்தாடிய தெல்லிப்பளை பிரதேச செயலக அணி நட்புக்கான வெற்றிக்கிண்ணத்தை பெற்றுக்கொண்டது.
தெல்லிப்பளை பிரதேச செயலக அணி 15 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 94 ஓட்டங்களை பெற்றது.
உடுவில் பிரதேச செயலக அணி 15 ஓவர்கள் நிறைவில் 81 ஓட்டங்களை 08 விக்கெட்டுக்களை இழந்து பெற்றது. போட்டியின் ஆட்டநாயகனாக தெல்லிப்பளை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த கே.அனுரதனும் போட்டியின் தொடர் ஆட்டநாயகனாக உடுவில் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த என்.கோசிகனும் தெரிவு செய்யப்பட்டனர்.
11 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
43 minute ago
2 hours ago