2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

சதுரங்க போட்டியில் பங்கேற்க கண்டி ஹரிகிசன் டுபாய் பயணம்

Kanagaraj   / 2013 டிசெம்பர் 22 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக இளைஞர் அணிகளுக்கிடையிலான சதுரங்க செம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக கண்டி திருத்துவ கல்லூரியில் நான்காம் தரத்தில் பயிலும் மாணவன் கிருபாகர் ஹரிகிசன் டுபாய் பயணமானார்.

பத்து வயதிற்கு கீழ்ப்பட்ட ஆண்களுக்கான போட்டியிலேயே இவர் பங்கேற்கவுள்ளார்.

இந்த போட்டிகள் டுபாய் அல்ஹயின் பல்கலைக்கழகத்தில் கடந்த 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமானதுடன் டிசெம்பர் மாதம் 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரையிலும் நடைபெறும்.

இலங்கையில் நடைபெற்ற ஒன்பது வயதிற்கு கீழ்ப்பட்ட ஆண்களுக்கான ஒற்றையர் போட்டியில் சாம்பியன் பட்டத்தை சுவீகரித்துக்கொண்டுள்ள இவர் போலந்து(2010),இந்தியா (2011), மற்றும் ரஷ்யா(2011) ஆகிய நாடுகளில் நடைபெற்ற சர்வதேச தரத்திலான போட்டிகளிலும் பங்கேற்று வெற்றியீட்டியுள்ளார்.

இவர், வடமராட்சி உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கண்டியை வசிப்பிடமாகவும் உடுப்பிட்டி அமெரிக்க மிஷனின் பழைய மாணவருமான குணரத்னம் கிருபாகரன் மற்றும் திகனை மாபேரிதென்ன வித்தியாலயத்தின் ஆசிரியையான காஞ்சனாதேவி ஆகியோரின் மகனாவார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X