2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

ஆரம்பமாகியது மன்னார் பிறிமியர் லீக்

Super User   / 2014 ஜூன் 08 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் பெரியகடை ஸ்டார் ஈகிள் விளையாட்டுக்கழகம் 04ஆவது வருடமாக நடாத்தும் மன்னார் பிறிமியர் லீக் நான்காவது பருவகால டுவெண்டி 20  கடின பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி  மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (07) ஆரம்பமாகியது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் வைபவ ரீதியாக ஆராம்பித்து வைத்தார்.

யாழ் பிரிமியர் லீக் நடப்புச் சம்பியன் அணிக்கும், மன்னார் பிரிமியர் லீக் அணிக்கும் இடையிலான போட்டி சனிக்கிழமை (07) இடம்பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ் பிரிமியர் லீக் நடப்புச் சம்பியன் அணி 20 பந்துப்பரிமாற்றங்கள் முடிவில் அணைத்து இலக்குகளையும் இழந்து 145 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட கழமிறங்கிய மன்னார் பிரிமியர் லீக் அணி 19.3 பந்துப்பரிமாற்றங்களில் 7 இலக்குகளை இழந்து 147 ஓட்டங்களைப்பெற்று வெற்றியை தமதாகத்கினர்.

தெடரின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை (08) நடப்புச் சம்பியன் சென்.அன்ரனிஸ் அணிக்கும் இந்து முண்னனி அணிக்குமிடையிலான போட்டிகளுடன் லீக் போட்டிகள் ஆரம்பமாகின்றது. மொத்தமாக 10 அணிகள் மோதும் இவ் பிரிமியர் லீக் டுவெண்டி 20  போட்டிகள் யூலை மாதம் 06ஆம் திகதி நிறைவுபெறும். 





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .