2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மர்ஹும் ஏ.எம்.தௌபீக் ஞாபகார்த்த இறுதிப்போட்டி

Super User   / 2014 ஜூன் 08 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எம்.ஐ.சம்சுதீன், எம்.வை.அமீர், ரீ.கே.றஹ்மத்துல்லா


கல்முனை லக்கி ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்ட கால்பந்தாட்ட சம்மேளனம், அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையே கடந்த ஒரு மாத காலமாக நடத்தி வந்த நோக் அவுட் அடிப்படையிலான மர்ஹும் ஏ.எம்.தௌபீக் ஞாபகார்த்த அழைப்பு கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி வெள்ளிக்கிழமை (06) கல்முனை சந்தான்கேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

11 கழகங்கள் பங்குபற்றிய மேற்படி சுற்றுப்போட்டியில் இறுதிப்போட்டிக்கு கல்முனை விர்லியன்ட் விளையாட்டுக்கழகமும் மருதமுனை ஈஸ்ட்டன் யூத் விளையாட்டுக்கழகமும் தெரிவாகின.

போட்டியில் இரு அணிகளும் ஆட்ட நேரமுடிவில் எவ்வித கோல்களையும் போறமுடியவில்லை. தண்டஉதை முறையில் மருதமுனை ஈஸ்ட்டன் யூத் விளையாட்டுக்கழகம், மர்ஹும் ஏ.எம்.தௌபீக் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்தை சுவிகரித்துக்கொண்டது.

அம்பாறை மாவட்ட கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவரும் கல்முனை மாநகரசபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஏ.எம்.றக்கீப் தலைமையில் இடம்பெற்ற இந்த இறுதிப்போட்டியிலும் பரிசளிப்பு விழாவிலும் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஆரிப் சம்சுதீன், விசேட அதிதியாக கல்முனைத் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும் கல்முனை மாநகரசபை உறுப்பினருமான ஏ.எம்.றியாஸ் கலந்து கொண்ட அதேவேளை அம்பாறை மாவட்ட கால்பந்தாட்ட சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.ஐ.எம். அப்துல் மனாப்பும் பிரசன்னமாகியிருந்தனர்.

வெற்றி பெற்ற கழகத்துக்கு கௌரவ மற்றும் விசேட அதிதிகள் வெற்றிக்கிண்ணத்தையும் பணப்பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .