2025 ஜூலை 07, திங்கட்கிழமை

அல்-அஸ்ரக் தேசிய பாடசாலை, மாகாணப் போட்டிக்கு தகுதி

George   / 2015 மார்ச் 16 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

கல்முனை கல்வி வலய பாடசாலைகளுக்களுக்கிடையிலான15 வயதுக்குட்பட்ட பிரிவினருக்கிடையில் நடத்தப்பட்ட பட்மின்டன் சுற்றுப்போட்டியில் நிந்தவூர் அல்-அஸ்ரக் தேசிய பாடசாலை சம்பியனாக தெரிவாகியுள்ளது.

நிந்தவூர் அல்-அஸ்ரக் தேசிய பாடசாலைக்கும் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரிக்குமிடையிலான பட்மின்டன் இறுதிப்போட்டி, கல்முனை வை.எப்.சி.உள்ளக அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த போட்டியில் வெற்றிபெற்றதையடுத்து, நிந்தவூர் அல்-அஸ்ரக் தேசிய பாடசாலை, ஒற்றையர் பிரிவில் சம்பியனானது.

இதேவேளை, 19 வயதுக்குட்டபட்ட பிரிவினருக்கிடையிலான பட்மின்டன் சுற்றுப்போட்டியில் நிந்தவூர் அல்-அஸ்ரக் தேசிய பாடசாலை ஒற்றையர் பிரிவில் இரண்டாமிடத்தைப் பெற்றுக்கொண்டது.

இந்த வெற்றிகள் மூலம் மூலம் நிந்தவூர் அல்-அஸ்ரக் தேசிய பாடசாலையின் பட்மின்டன் அணி, மாகாணப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளதாக பாடசாலையின் விளையாட்டுப் பொறுப்பாசிரியர் எம்.பி.மஹ்றூப் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .