Shanmugan Murugavel / 2024 ஓகஸ்ட் 26 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.யூ.எம். சனூன்

புத்தளத்தில் புத்தளம் கால்பந்தாட்ட லீக் தொடராக நடாத்தி வருகின்ற கால்பந்தாட்டத் தொடரான ஜெயா பார்ம் வெற்றிக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு லிவர்பூல் அணி தகுதி பெற்றுள்ளது.
புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை (24) நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் கற்பிட்டி பேர்ள்ஸ் அணியை வென்றே அரையிறுதிப் போட்டிக்கு லிவர்பூல் தகுதி பெற்றது.
இப்போட்டியானது வழமையான நேர முடிவில் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. லிவர்பூல் சார்பாக, எம்.எம். முஸக்கிர் இரண்டு கோல் களையும், எம்.என்.எம். ஆஷிக் ஒரு கோலையும் பெற்றனர். பேர்ள்ஸ் அணி சார்பாக எம்.எப்.எம். அஹாதிர் இரண்டு கோல்களையும், எம்.எச். ரிஜ்வான் ஒரு கோலையும் பெற்றுக் கொடுத்தனர்.
வெற்றியைத் தீர்மானிப்பதற்காக இடம்பெற்ற பெனால்டியில் லிவர்பூல் 3-1 என்ற ரீதியில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
56 minute ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
3 hours ago
7 hours ago