2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

வெபர் மைதானத்தில் 34வது இளைஞர் விளையாட்டு விழா

Freelancer   / 2023 ஒக்டோபர் 30 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி. சகாதேவராஜா
 
மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் விளையாட்டு விழாவின் சுவட்டு மைதான நிகழ்வுகள் (29)  ஞாயிற்றுக்கிழமை  மட். வெபர் விளையாட்டு மைதானத்தில் நடை பெற்றது. 
 
மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளரின் வழிகாட்டலில் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி (மாவட்ட செயலாளர்) திருமதி நிசாந்தி அருள்மொழி மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திரு மாணிக்கப்போடி சசிகுமாரின் நெறிப்படுத்தல் மூலம் நடைபெற்றது.
 
இதில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவின் இளைஞர் சேவை அதிகாரி த.சபியதாஸ் விளையாட்டு பயிற்சியாளர்கள் செல்வன் பிறைசூடி  வதீஸ்க்குமார்,
தே.அருள்நாதன், ​லெக்ஸ்மிசுந்தரம் அகிலரூபன் ஆகியோர் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச இளைஞர், யுவதிகளை நெறிப்படுத்தினர். 
 
அந்த வகையில் 14 பிரதேச செயலக பிரிவிலிருந்தும் அதிகளவான இளைஞர் யுவதிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்ட நிகழ்வில் இம்முறையும் ஒட்டுமொத்த மெய்வல்லுனர் சம்பியனாக மண்முனை தென் எருவில் பற்று  களுவாஞ்சிகுடிபிரதேசசெயலகம் தெரிவு செய்யப்பட்டது.
ஒட்டுமொத்தமாக 
33 முதலாமிடங்களையும்
03 இரண்டாமிடங்களையும்
03 மூன்றாமிடங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளது.
 
இதில் 
களுதாவளை ஜோர்டன் இளைஞர் கழகம்
21 முதலாமிடங்களையும்
02 இரண்டாமிடங்களையும்
02 மூன்றாமிடங்களையும் பெற்றது. 
 
செட்டிபாளையம்  பாடசாலை இளைஞர் கழகம்
12 முதலாமிடங்களையும்
 
களுதாவளை திருஞானசம்பந்தர் குருகுல இளைஞர் கழகம்
01 இரண்டாமிடங்களையும்
01 மூன்றாமிடங்களையும் 
பெற்றுக்கொண்டுள்ளனர் 
 
மேலும்,  20 வயதிற்குட்பட்ட பெண்கள் அணியினர் 4 X100M , 4 X400M செட்டிபாளையம் மற்றும் களுதவளை பெண்வீராங்கனைகள் இணைந்து ஓடி பெற்று வெற்றி வாகை சூடினர். 
 
மிகமுக்கியமாக உயரம் பாய்தல் நான்கு போட்டி நிகழ்வுகளிலும் மற்றும் ஆண்கள் 4 அஞ்சல் போட்டிகளிலும் களுதவளை வீரர்களே வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது. M

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X