Niroshini / 2016 ஜூன் 21 , மு.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்
கிளிநொச்சியில் முழு நிலவுக் கலை விழா நிகழ்வின் நிலவின் முற்றம் பாகம் இரண்டு ஞாயிற்றுக்கிழமை(19) மாலை ஆறு மணியளவில் பண்டிதர் பரந்தாமன் கவின் கலை கல்லூரி கலையரங்கில் இடம்பெற்றது.
இந்நிகழ்வை, பண்டிதர் பரந்தாமன் கவின்கலை கல்லூரியும் யோகர் சுவாமிகள் நற்பணி மன்றமும் காவேரி கலாமன்றமும் இணைந்து நடாத்தின.
பரந்தாமன் கவின் கலை கல்லூரியின் துணை நிறுவுனர் திரு.சி.ஜீவநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நடன நிகழ்வுகள், பாடல்கள், கர்நாடக சங்கீத இசை விருந்துகள் நடை பெற்றது.
அதனைத் தொடர்ந்து, போட்டிகளில் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இதில், பிரதம விருந்தினர்களாக கிளிநொச்சி தமிழ் உதவிக்கல்விப்பணிப்பாளர் பிரேமா மதுரநாயகம், ஓய்வு நிலை அதிபர் அ.கனகரட்னம், மூத்த சிறுகதை எழுத்தாளர் இ.நடராஜா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.



14 minute ago
32 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
32 minute ago
2 hours ago
2 hours ago