Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Administrator / 2015 ஜூன் 29 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல்லவி
ஆசையை அளவோடமைத்தவர் வாழ்வில்
ஆனந்தம் சாந்தி அமைந்துவிடும்
அளவினைமீறும் ஆசையைக்கொண்டால்
அரக்கர்குணமே அமைந்துவிடும் - உன்
ஆனந்த வாழ்வை அழித்துவிடும்
ஆண்டவன் சன்னிதி தவறிவிடும்
சரணம்
1. தேவையெனும் நோய் உள்ளத்தில் இருந்தால்
ஆசை அவசியம் வெளியாகும்
அளவினை மீறும் ஆசைகள் அனைத்தும்
அறிவை இருளில் புதைத்துவிடும் - உன்
அன்றாட வாழ்வை நரகாக்கும்
ஆத்ம சாந்திக்கும் ஆசை அவசியம்
அளவறிந்ததனை எடுத்துக்கொள்ளு – நீ
ஆண்டவன் சன்னிதி சேர்ந்திடுவாய்
அருட்கொடைபெற்று மகிழ்ந்திடுவாய் (ஆசையை)
2. உள்ளத்தை உண்மையில் தரிபடுத்து – நீ
உத்தமர் வாழ்வை மேற்கொள்ளு
உலகமே சதமென்று நம்பாதே – அதை
என்றோ ஒரு நாள் இழந்திடுவாய்
என்றோ ஒரு நாள் இழந்திடுவாய்
இணைகொண்ட உள்ளத்தில் ஆசையணையா
ஆசையே நரகில் புகுத்திவிடும் - உன்
அன்றாட வாழ்வும் நரகாக்கும்
ஆகிறா வாழ்வும் நெருப்பாகும் (ஆசையை)
ஷெய்ஹுல் முப்லிஹீன் எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ் (றஹ்)
1 hours ago
1 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
4 hours ago