Sudharshini / 2015 செப்டெம்பர் 06 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
மண்ணில் ஈரமும் உள்ளது
வரட்சியும் உள்ளது
பயிரிடப்படாது காத்திருந்த
நாட்களில்
எங்கிருந்தோ போசனையைபெற்று
காளான்கள் வளருகின்றன
காளான்கள் தானே என்று
கண்டு கொள்ளாதிருந்தனர்
காலம் உன்னதமாய் இருந்தபோது
காளான்கள் கால்முளைத்ததாக
நினைத்துகொண்டு நகர்கின்றன
தாவரங்கள் வளர்ந்திருக்கும்
இடங்களில்
காளான்கள் தன்னை வித்தியாசபடுத்துகின்றன
விளம்பரப்படுத்துகின்றன
காளான்கள் நிலம் முழுவதையும்
படர்ந்தன
கடைசியில் காணாமல் போகின்றன...
-எஸ்.பி.பாலமுருகன்
பதுளை
20 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
3 hours ago