R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 28 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண 2025 வருடாந்த நிதி ஒதுக்கீடுகளின் கீழ் 18 மில்லியன் ரூபா செலவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மங்களகம பகுதியில் மாகாண சுதேச மருத்துவத் துறையின் கீழ் மங்களகம ஆயுர்வேத மருத்துவ மருந்தகத்தை நிர்மாணிப்பதற்கான புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் செவ்வாய்க்கிழமை ( 26 ) அன்று நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ். அருள் ராஜ், மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் பணிப்பாளர் டொக்டர் நபீல் ஆகியோர் கலந்து கொண்டனர்.



ஏ.எச்.ஹஸ்பர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .