2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

அறிவிப்பை மீறிய பாமசிக்கு சீல் வைப்பு

Freelancer   / 2021 ஜூன் 24 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி கொவிட் தடுப்பு செயலணியின் அறிவிப்பை மீறி இரவு நேரத்திலும் திறக்கப்பட்டிருந்த பாமசியொன்றுக்கு நேற்று (23) இரவு சீல் வைக்கப்பட்டது.

காத்தான்குடியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், அத்தியாவசிய  பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் உட்பட பாமசிகள் அனைத்தும் மாலை 6 மணியுடன் மூடப்பட வேண்டும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அவ்வறிவித்தலை மீறி    இரவு நேரத்திலும் திறந்திருந்ததால் குறித்த பாமசிக்கு சீல் வைக்கப்பட்டது.

அத்துடன்  மேலும் குறித்த பாமசிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

M


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .