R.Tharaniya / 2025 ஜூன் 24 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தை தமிழரசுக் கட்சி 13 மேலதிக வாக்குகளால் கைப்பற்றியுள்ளது டன் மேயராக கந்தசாமி செல்வராஜா, பிரதி மேயராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் நெய்னா முஹம்மது மஹ்சூம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை மாநகர சபையின் தவிசாளர் தெரிவிற்கான அமர்வு திங்கட்கிழமை (23) அன்று மதியம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளரும் தலைமை தாங்கும் அதிகாரியுமான அஸ்மி ஆதம்லெப்பை தலைமையில் நடைபெற்றது.
திருகோணமலை மாநகர சபையின் மாநகர முதல்வராக கந்தசாமி செல்வராஜா ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்துரைத்தார்.
திருகோணமலை மாநகர சபையின் வளர்ச்சிக்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் ஜாதி, மத ,மொழி பேதமின்றி ஒன்றிணைய வேண்டும் அனைத்து உறுப்பினர்களின் உதவியையும் கோரி நிற்கிறேன் எதிர்காலத்தில் திறம்பட ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.




ஏ.எச் ஹஸ்பர்
எஸ்.கீதபொன்கலன்
அ . அச்சுதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .