2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

கல்முனையில் நடமாடும் சேவை

Janu   / 2023 ஓகஸ்ட் 21 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆளுநரின்  பணிப்புரைக்கமைவாக  கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்கள மாவட்ட அலுவலகம் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இணைந்து நடாத்தும் நடமாடும் இலவச சுகாதார வைத்திய சேவைகள்  சனிக்கிழமை (19)   கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந் நடமாடும் இலவச சுகாதார வைத்திய சேவையில்  பற்சிகிச்சை ,கண்பரிசோதனை,தொற்றா நோய் பரிசோதனைகள்,ஆயுர்வேத மருத்துவ சேவைகள்  , உடல் நிறை குறியீட்டு(BMI)  பார்த்தல் ,இரத்த அழுத்தம் நீரிழிவு நோய்க்குரிய பரிசோதனைகள், தகுதியுடையவர்களுக்கான பொதுசன மாதாந்த உதவிக் கொடுப்பனவு விண்ணப்ப விநியோகம்,தகுதியுடையவர்களுக்கான முதியோர் அடையாள அட்டை விண்ணப்ப விநியோகம் ,மாற்றுத் திறனாளிகளுக்கான சுகாதார சேவைகள் தகுதியுடையவர்களுக்கான நோய்க் கொடுப்பனவுக்கான விண்ணப்ப விநியோகம் (புற்றுநோய், சிறுநீரக நோய், தலசீமியா, தொழுநோய்) என்பன மேற்கொள்ளப்பட்டன.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .