Janu / 2024 ஏப்ரல் 25 , பி.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்தினால் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் வைத்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களிடம் விசாரணைகள் முன்னெடுப்பு வியாழக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது .
ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்ட களுவாஞ்சிகுடி, ஆரையம்பதி, வெல்லாவெளி பட்டிப்பளை, ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களிடத்தில் இதன்போது கொழும்பிலிருந்து வருகைதந்த காணாமலாக்கப்பட்டோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகள் நேரில் வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
61 பேருக்கு இதன்போது அழைப்பு விடக்கப்பட்டிருந்தன. இதன்போது காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பிலும், அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடுகள் வழங்குவது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
வ.சக்தி


40 minute ago
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
19 Nov 2025