2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கிழக்கு ஆளுநர் விசேட நடவடிக்கை

Freelancer   / 2023 மே 25 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

கிழக்கு மாகாணத்திலுள்ள கடற்கரை பகுதியை ஆசியாவின் அழகான கடற்கரையாகவும்,தூய்மையான கடற்கரையாகவும் மாற்றும் விசேட திட்டமொன்றை கிழக்கு மாகாண ஆளுநர் ஆறுமுகம் தொண்டமான் ஆரம்பித்துள்ளார்.

அந்தவகையில் கிழக்கு மாகாணத்தில் உள்ளுராட்சி மன்ற பிரிவுகளில் கடற்கரையை கொண்ட சகல கடற்கரைப் பகுதியும் எதிர்வரும் சனிக்கிழமை (27) ஆம் திகதி காலை 7.00 மணிக்கு சிரமதானம் செய்யப்பட்டு சுத்தம் செய்யப்பட வேண்டுமென சகல உள்ளுராட்சி மன்ற செயலாளர்களுக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.அத்தோடு அலுவலக உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் சிரமதானப் பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X