Freelancer / 2023 மே 23 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் சுற்றுலாத்துறைக்கு பெயர்போன இடமாகவுள்ள பாசிக்குடா கடற்கரையோரம் அமைந்துள்ள பெரிய கிணறு ஒன்றினால் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அச்சம் கொள்கின்றனர். பல வருடங்களுக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள இக் கிணறு உயரம் குறைவான நிலையில் காணப்படுகிறது.
இதனால், அங்கு வரும் சிறுவர்கள் கிணற்றின் அருகில் செல்வதும், அதனை எட்டிப் பார்ப்பதுமாக உள்ளனர். இதனால், சிறுவர்கள் தவறி விழுந்து விடுவார்களோ என்று அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அச்சம் கொள்கின்றனர்.
இவ்வாறு பாதுகாப்பு இல்லாத வகையிலுள்ள இந்த கிணற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுத்து புனர்நிர்மாணம் செய்யுமாறு சுற்றுலாப் பயணிகள் வேண்டிக் கொள்கின்றனர்.
எச்.எம்.எம்.பர்ஸான்


11 minute ago
30 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
30 minute ago
1 hours ago