2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

பாதை சீர்கேட்டால் மக்கள் அவதி

Freelancer   / 2022 பெப்ரவரி 12 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

போரதீவுப்பற்று பிரதேச சபையின் மண்டூர் கமநல சேவைகள் நிலையத்திற்குட்பட்ட மூங்கிலாறு சமுலையடிவட்டை பாதை, குண்டும் குழியுமாக காணப்படுவதால் பாதையைப் பயன்படுத்துவோர் பல்வேறு அசெளகரியங்களுக்குள்ளாவதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது.

மட்டு. மண்டூர் 14 ஆம் கிராம சந்தியிலிருந்து மூங்கிலாறு பாலத்தின் ஊடாக நெடியவட்டை, ஆணைகட்டியவெளி, சின்னவத்தை ஊடாக கொணகொல்லை அம்பாறை - மகோயா பாதையை சென்றடையும் பிரதான பாதையே இவ்வாறு சேதமடைந்து காணப்படுகிறது.

பாதை சேறும், சகதியுமாக காணப்படுவதனால் அவசரத் தேவையின் நிமித்தம் பயணிப்போர் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தொலைதூர மாற்றுப் பாதைகளை பயன்படுத்த வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்படுதாகவும் தெரியவருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X