2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

யானை தாக்கியதில் நபரொருவர் படுகாயம்

R.Tharaniya   / 2025 ஜூன் 11 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

யானை தாக்கியதில் நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்தானை பகுதியில் வைத்து புதன்கிழமை(11) அன்று நள்ளிரவு 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை - மாவடிச்சேனை பிரதேசத்தில் வசித்து வந்த 65 வயதுடைய சுலைமா லெப்பை என்பவர் பொத்தானையில் உள்ள தனது இருப்பிடத்தில் இருக்கும் போதே யானை தாக்கியுள்ளது.

இவ்வாறு யானையின் தாக்குதலுக்கான நபர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாமாற்றப்பற்றுள்ளார்.

எச்.எம்.எம்.பர்ஸான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .