A.P.Mathan / 2013 ஜனவரி 14 , மு.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
"கலைஞர் கருணாநிதி சகிப்புத்தன்மை மிக்கவர்" என்று தேசிய முற்போக்கு திராவிடர் கழகத் தலைவர் விஜயகாந்த் திடீரென்று "சான்றிதழ்" வழங்கியிருக்கிறார். தமிழகத்தில் மதுரை அருகில் உள்ள ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள் கோயிலுக்கு அதிகாலையில் சென்ற விஜயகாந்த் தரிசனம் முடிந்து வெளியே வந்து நிருபர்களை சந்தித்தார். அப்போது, "தி.மு.க. ஆட்சியிலும் நான் குறைகளை சுட்டிக்காட்டினேன். ஆனால் அவர்கள் என் மீது அவதூறு வழக்கு போடவில்லை. கலைஞர் சகிப்புத்தன்மை கொண்டவர். யார் மீதும் வழக்குப் போட்டு பழி வாங்கமாட்டார்" என்று பரபரப்பாக பேட்டியளித்தார். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து மூன்று தேர்தல்களை சந்தித்த பிறகு இப்போதுதான் தி.மு.க. தலைவர் கருணாநிதியை "சகிப்புத்தன்மை மிக்கவர்" என்று வெளிப்படையாக பாராட்டியிருக்கிறார்.4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago