A.P.Mathan / 2013 மார்ச் 04 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை தமிழர் பிரச்சினை தமிழகத்தில் "உணர்ச்சி பிழம்பாக" மாறியிருக்கிறது. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட காட்சிகள் வெளியாக, தமிழகத்தில் உள்ள கட்சிகள் எல்லாமே போராட்டக் களத்தில் வந்து நிற்கின்றன. தமிழக முதல்வர் ஜெயலலிதா, "இது மனிதாபிமானமற்ற செயல்" என்று பாதயாத்திரையில் வைகோவை சந்தித்த மறுநாளே பரபரப்பு பேட்டி கொடுத்தார். இந்த பேட்டி அ.தி.மு.க.வின் பக்கமாகபோக நினைக்கும் கட்சிகள் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. "கருணாநிதி நாடகமாடுகிறார். இலங்கை தமிழர் பிரச்சினையில் முதல்வர் உண்மையாகவே போராடுகிறார்" என்று வைகோவே ஒரு வார இதழுக்கு பேட்டி கொடுத்தார். "காங்கிரஸ் எதிர்ப்பு" என்ற களத்தை உருவாக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ஆளும் அ.தி.மு.க.விற்கு இப்போது திரையிடப்பட்ட "சேனல்-4" காட்சிகள் புதுவித உத்வேகத்தை கொடுத்திருக்கிறது. "ஏற்கனவே தமிழக சட்டமன்றம் இது தொடர்பாக நிறைவேற்றியுள்ள தீர்மானங்களுக்கு (இலங்கை பொருளாதார தடை, ஜனாதிபதி ராஜபக்ஷ மீது சர்வதேச விசாரணை) செயல்வடிவம் கொடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்ற கோரிக்கையை அ.தி.மு.க.வும், அதை ஆதரிக்கும் ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago